சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சியில் வழங்கப்படாத பதவி: ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஊடகங்களில் வெளிவரும் செய்திகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை (M. A. Sumanthiran) தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என விழித்து எழுவது பொருத்தமற்றது என தமிழரசுக் கட்சியின் முதன்மை உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பேச்சாளர் பதவி
அதன் போது, தமிழ் அரசுக்கட்சிக்கு இதுவரை பேச்சாளர் என்ற பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை என்றும் ,ஊடகங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செய்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தமிழரசுகட்சி பேச்சாளர் என குறிப்பிட்டது உண்மையில் தவறுதலான ஒரு விடயமாகும்.
கட்சி உபவிதிகள்
நாடாளுமன்ற குழுவால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சாளராகவே சுமந்திரன் நியமிக்கப்பட்டார், ஊடகங்களும் அவர்கள் விரும்பிய படி பதவிகளை குறிப்பிடுவது தமிழரசுக்கட்சி உபவிதிக்கு முரணானது.

தற்போது தமிழரசுகட்சி நீதிமன்றில் வழக்கு நடைபெறும் வேளையில் கட்சி உபவிதிகளை மீறி விரும்பியபடி பதவிகளை குறிப்பிடுவதும் தவறு.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எந்த பெரும்பான்மை சிங்கள வேட்பாளரை ஆதரிப்பதாகவும் தமிழரசுக்கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்பதே தற்போதைய நிலைமையாக உள்ளது. என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |