புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்..! யாழில் இருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kanna
யாழ்ப்பாணம் நெல்லியடி காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35 வயது மற்றும் 50 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரகசிய தகவல்
வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதனையடுத்து குறித்த பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது , காட்டுப்பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 லீட்டர் கசிப்பினையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நெல்லியடி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி