திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி
யாழ்ப்பாணத்தில் திருமணம் என்ற போர்வையில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட நிலையில், நீதிக்கான போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
அச்சுவேலியை பூர்வீகமாக்கொண்ட ஜேர்மனில் வசிக்கும் நபர் ஒருவரே தன்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளதுடன், விவாகரத்து தரும்படி மிரட்டல் விடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

கடந்த பங்குனி மாதம் இந்தியாவில் திருமணம் இடம்பெற்ற நிலையில், சீதனமாக வழங்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை குறித்த நபர் பெற்றுச்சென்றுள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து தராது விடின் வாள்வெட்டுக் குழு வீட்டுக்கு வரும் என அச்சுறுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பில் இந்திய தூதரகத்திடம் ஆலோசனை பெற்றுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.
தனக்கு நீதி வேண்டும் எனவும் தன்னைப் போல இனி எந்தப் பெண்ணும் இவர்களால் பாதிக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜேர்மனியில் வசிக்கும் குறிப்பிட்ட இஞைன் எங்களைத் தொடர்புகொண்டு, தாம் பிரிந்ததற்கான வேறு சில காரணங்களைக் கூறினார்.
குறிப்பிட்ட பெண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் அந்தக் காரணங்களை பகிரங்கமாக ஊடகத்தில் வெளியிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு மணப்பெண்ணிடம் இருந்து தான் எந்தவிதமான நகைகளையோ அல்லது பணத்தையோ பெற்றுச்செல்லவில்லை என்றும் கூறினார்.
அததோடு தான் விடுதலைப் புலி உறுப்பினர் என்று எந்தச் சந்தரப்பத்திலும் கூறவில்லை என்றும், பெண்ணுக்கு மிரட்டல்கள் எதனையும் விடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
திருமணச் செலவு மற்றும் பெண் வீட்டாருக்கான கடவுச் சீட்டுச் செலவு, தாலிக்கொடியின் செலவு போன்றன தன்னாலேயே மேற்கொள்ளப்பட்டதாவும் கருத்து வெளியிட்டார். அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எங்களிடம் சமர்ப்பித்திருந்தார்