பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி : கேள்வியெழுப்பிய சிறீதரன்

Jaffna S Shritharan Tourism Jaffna International Airport
By Sathangani Aug 20, 2025 06:04 AM GMT
Report

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையக்கட்டடம் கட்டப்படவுள்ளதுடன், ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனையத்திற்கான ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கான கேள்விப்பத்திர செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்று, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு (Janitha Ruwan Kodithuwakku) தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கென காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், முனையத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க முடியும் என்றும், பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட ஓடுபாதை நீடிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், சாத்திய ஆய்வு நிலுவையில் உள்ளதாகவும், இன்னும் எந்த கொள்முதலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் குறித்த முந்தைய நிர்வாகத்தின் அணுகுமுறையைப் போலல்லாமல், பலாலி விமான நிலையம் அரசாங்கக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் குறித்து இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கேள்வியெழுப்பியுள்ளார். 

அத்துடன் குறித்த விமான நிலையத்தை அபிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பின்வரும் விடயங்களின் ஊடாக சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயனக்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் - பலாலி விமான சர்வதேச விமான நிலையம் வடக்கு கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. 

விமான நிலையம் ஊடாகவே எயார் சிலோன் நிறுவனத்தினுடைய முதலாவது விமான பயணம் இரத்மலானையில் இருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்பிற்கும் விமான சேவை ஆரரம்பிக்கப்பட்டு போர்க்கால சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

போருக்கு பின்னர் இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்ற போதும் தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில் ய 320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக்கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்குதல்.

அதன்மூலம் புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த விமான நிலையம் ஊடாக வருகை தரும் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். 

குறிப்பாக பெரிய ரக விமானங்கள் செயற்படத் தொடங்கினால் பயணிகள் கொண்டுவரக்கூடிய பொதிகளின் அளவும் 15 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்படும். இதனால் வடக்கு கிழக்கிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் தெரிவாக பலாலி விமான நிலையம் முன்னுரிமை பெறும்.

இதன்மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைவதுடன் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படும். அத்துடன் வடக்கு கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மை மிகு ஆலயங்களை தரிசிக்க பெருமளவு இந்திய சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கப்படும்.

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

நல்லூர் கந்தனின் 23ஆம் நாள் காலை உற்சவம்

நல்லூர் கந்தனின் 23ஆம் நாள் காலை உற்சவம்

இந்தியாவின் சில பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

இந்தியாவின் சில பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பளை, பேர்லின், Germany, Warendorf, Germany, கொக்குவில்

19 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025