யாழில் வீடு புகுந்து கொடூர வாள்வெட்டு - காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள தகவல்!
கல்லுண்டாயில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜனவரி மாதம் முதலாம் திகதி மானிப்பாய் கல்லுண்டாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை நபர் ஒருவர் வாளால் வெட்டி காயப்படுத்தப்படுத்தியுள்ளார்.
வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் செயற்படும் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.