தமிழரசுக் கட்சியை பழிவாங்கத் துடிக்கும் பிற கட்சிகள் - சிறீதரன் ஆதங்கம்
70 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளரை ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் காரணம் என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முதல்வர் தெரிவு விவகாரம்
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மாநகர சபையில் மக்கள் எமக்கு பெரும்பான்மையினை வழங்க தவறி விட்டார்கள். அதைவிட எதிர்வரும் காலத்தில் யாழ். மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெற்று யாழ் மாநகர சபையினை பூரணமாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
அதற்குரிய ஆணையை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.
எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையை தமிழரசுக் கட்சி பூரணமாக கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும் இடமில்லை.
மக்கள் எங்களுடன் தான் உள்ளார்கள். ஓரிருவர் கூறும் வார்த்தைகள் நியமாகிவிட முடியாது. மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தை பெறுவதற்காக பின்வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்கு கலந்து கொள்ளாது விட்ட ஏனைய கட்சிகளின் கதைகளை கேட்பதற்கு நாம் தயார் இல்லை.
பழிவாங்கும் எண்ணம்
ஏற்கனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராக செயற்பட்டவர். அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். ஆளுமை மிக்கவர். அவ்வாறான ஒருவரைத் தான் இம்முறை எமது வேட்பாளராக தெரிவு செய்தோம்.
அது மாத்திரமல்ல கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுத்த ஒருவரை தான் தமிழரசுக் கட்சி முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்துள்ளது.
எனவே ஏனைய கட்சிகள் எமது கட்சியை பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது” - என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
