மாதகலில் கடற்படை காணி அபகரிப்பு- ஒன்று திரண்ட மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட அதிகாரிகள்! (காணொளி)
மாதகல் பகுதியில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
மாதகல் ஜே/150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் , அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்தது.
காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சென்ற போது, காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து, காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
