தேசிய மருத்துவமனையாக யாழ் போதனா வைத்தியசாலை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை (Jaffna Teaching Hospital) தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்து குறித்து போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் ஆளுநரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று புதன்கிழமை (05.02.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக மீளாய்வு செய்யப்படவில்லை என பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுநரிடம் கோரிக்கை
அத்துடன், ஏனைய மருத்துவமனைகளுடன் ஆளணிகளை ஒப்பிட்டு போதனா மருத்துவமனைக்கான ஆளணியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை பாடுகளையும் பணிப்பாளர் ஆளுநரிடம் எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கும் நீண்ட கால நோக்கிலான 10 மாடியிலான புதிய கட்டடத்தின் தேவைப்பாடுகளையும் அதற்கான வரைபடத்தையும் ஆளுநருக்கு காண்பித்து போதனா மருத்துவமனைப் பணிப்பாளரால் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கான நிதியைப் பெற்றுத்தருமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)