வழமைக்கு திரும்பிய யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள்

Jaffna SL Protest Jaffna Teaching Hospital
By Shalini Balachandran Mar 01, 2025 06:35 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

புதிய இணைப்பு

யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றையதினம் வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்று (01)முதல் மீண்டும் வைத்தியர்கள் சேவைக்கு திரும்பி உள்ளதை மகிழ்ச்சியுடன் நோயாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப்பை பொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் தற்போதைய நிலைமை பற்றிக் கலந்துரையாடிய பின்னர், நேற்றுக் காலை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பணிப்பாளருக்கு கடிதம்

அதில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு நேற்று (28) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வழமைக்கு திரும்பிய யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் | Jaffna Teaching Hospital Clinic Services Resume

அக்கடிதத்தில், “யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைக் குழுவின் பரிந்துரையின்படி இப்பிரிவின் (ATICU விபத்து அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு) சுமூக நிலை கருதி ,பொறுப்புத் தாதிய உத்தியோகத்தராக நியமிக்கபட்டிருந்த தாதியை வேறு பிரிவிக்கு இதுவரை காலமும் மாற்றாமல், விபத்து அதிதீவிர கண்காணிப்புப்பிரிவில் (ATICU) சிகிச்சை பெறுவதற்கான நோயாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுவதனை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு விபத்து அதிதீவிரக் கண்காணிப்புப் பிரிவு (ATICU) நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நல்ல நிர்வாகத்துடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவினை நிறுவுவதற்காக எமது தொழிற்சங்க நடவடிக்கையை விபத்து அதிதீவிர கண்காணிப்பு பிரிவிற்கு மட்டும் மட்டுப்படுத்திக் குறைக்கிறோம்.

இதன் காரணமாக ATICU இலிருந்து, சத்திர சிகிச்சை அதிதீவிர கண் காணிப்பு பிரிவுக்கு (SICU) நோயாளிகளை மாற்றும் போது SICUவில் கட்டில்கள் கிடைப்பதற்கு வசதியாக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட விபத்து அறுவை சிகிச்சைகள் தவிர ஏனைய வழக்கமான சத்திர சிகிச்சைகள் இடம்பெறாது.

தொழிற்சங்க நடவடிக்கை

தற்போதைய பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் ATICU பணியில் இருக்கும் வரை ATICU இல் புதிய நோயாளர்களின் அனுமதிகளை மருத்துவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.

ATICU இல் உள்ள நோயாளிகள் மருத்துவ விடுதிகள் அல்லது SICUக்கு மாற்றப்பட்டதும் ATICU இல் கடமையில் உள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையாக அங்கிருந்து பணிப்பாளர் பணிமனைக்கு இடமாற்றப்படுவார்கள்.

வழமைக்கு திரும்பிய யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் | Jaffna Teaching Hospital Clinic Services Resume

எனவே அவர்களை வைத்தியசாலையில் உள்ள ஏனைய அதிதீவிர சிகிச்சை கண்காணிப்புப் பிரிவுகளுக்கு மாற்றுமாறு பணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்படும். சிறந்த நிர்வாகத்துடன் கூடிய நோயாளிகளுக்குப் பாதுகாப்பான ATICUஐ உருவாக்குவதற்கு நாங்கள் துணை நிற்போம்.

கிளினிக்குகள், வெளி நோயாளர் பிரிவு மற்றும் பிற சேவைகள் இன்று மாலை 4 மணி முதல் வழக்கம் போல் செயற்படும்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுறுத்தி, கலந்துரையாடலின் போது பணிப்பாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி முழு அளவில் எமது தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna)  கிளினிக் சேவைகள் வழமை போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில், இன்று (01) முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று (28) இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்து வந்தனர்.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிராஜாவுரிமை : வெளியான தகவல்

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிராஜாவுரிமை : வெளியான தகவல்

பாதுகாப்பதற்கான நடவடிக்கை

இதனால் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வழமைக்கு திரும்பிய யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் | Jaffna Teaching Hospital Clinic Services Resume

இந்தநிலையில், வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நலன் கருதி கிளினிக் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம்

புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம்

பல்வேறு பாதிப்பு

இதனால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாவதுடன் உரிய சிகிச்சைகளை பெறமுடியாது பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.

வழமைக்கு திரும்பிய யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் | Jaffna Teaching Hospital Clinic Services Resume

வைத்தியர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்கள் பெரும் ஆபத்தையும் எதிர்நோக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் இப்பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் பகுதியளவில் இணக்கம் ஏற்பட்டாலும் இதுவரை முழுமையான இணக்கம் எட்டப்படவில்லை என அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் வெடித்த பாரிய போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் வெடித்த பாரிய போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023