யாழ். கொழும்பு தொடருந்து சேவை...! பிரதி அமைச்சரின் அறிவிப்பு
வடக்குக்கான தொடருந்துகளில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரனின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உறங்கும் பெட்டிகள் அடங்கிய தொடருந்துகள்
அவர் மேலும் தெரிவிக்கையில் 2014 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் தொடருந்து திணைக்களத்தின் மொத்த வருமானத்தில் 8 வீதமானவை வடக்கு, கிழக்கு தொடருந்து நிலையங்கள் ஊடாக கிடைத்துள்ளன.

இதேவேளை உறங்கும் பெட்டிகள் அடங்கிய தொடருந்துள் எதுவும் இதுவரையில் சேவையில் ஈடுபடவில்லை.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய தொடருந்து பெட்டிகளே இணைக்கப்பட்டுள்ளதால் பழைய உறங்கும் பெட்டி சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட பெட்டியுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன - என்றார்.
குறைந்தளவான பயணி
இதன்போது, சிறீதரன் எம். பி. இனி வரும் நாட்களிலாவது தொடருந்துகளில் உறங்கும் பெட்டிகள் இணைக்கப்படுமா? அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் உறங்கும் பெட்டிகளை இணைத்தால் அதில் குறைந்தளவான பயணிகளே - 12 பேரே பயணிக்க முடியும்.
ஆனால் குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகளில் 48 பேர் வரை பயணி கள் பயணிக்க முடியும். இதனால் உறங்கும் பெட்டிகளை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்