யாழ் உள்ளிட்ட பகுதிகளுக்கான தொடருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்குக்கான தொடருந்து சேவைகள் நத்தாருக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இயற்கை பேரழிவால் சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் தற்போது சுமார் 95 வீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை
அதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு மார்க்கத்தில் கொழும்பிலிருந்து அனுராதபுரம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிழக்கு பாதையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பாதையில் தொடருந்துகள் தற்போது மகாவ வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடருந்து பாதையில் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முதல் தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 9 மணி நேரம் முன்