கனடாவில் ஆற்றில் மூழ்கி யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு
கனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் உள்ள அல்பானி ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் அவசர மருத்துவ உதவியாளராக பணியான்றி வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காணாமல் போன இளைஞரின் உடல்

புதன்கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போன இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் காணாமல்போன நிலையில்

இளைஞர் காணாமல்போன நிலையில் 20 படகுகளும் 50 தனி நபர்களும் இவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டதுடன் ஒன்றாரியோ மாகாண காவல்துறையினரும் இவரை தேடும் முயற்சிக்கு உதவியதாக கூறப்படுகின்றது.
படகு ஆழமற்ற நீரில் நுழைந்ததால்

அவர் பயணித்த படகு ஆழமற்ற நீரில் நுழைந்ததால் வேகமாக ஓடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளை உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்