யாழ். இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
Bandaranaike International Airport
Jaffna
Italy
Law and Order
By Sathangani
யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (25) விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போலியான கடவுசீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் (Italy) தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்தல்
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 21 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த இளைஞர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்