கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இன்று (17) கைது செய்யப்பட்ட பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
விசாரணை
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவவை சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அவர் கடமை தவறியதால் இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபரான அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேக நபரின் தொலைப்பேசி அழைப்புகளின் பதிவை அழைக்கவும் காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.
இதன்படி, கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்