எப்ஸ்டீன் ஒரு உளவுத்துறை கருவியா...! உலகத்தலைவர்களை ஆட்டி வைக்கும் அதிர்ச்சிகள்
அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டுள்ள 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவின் தொழிலதிபர் மட்டுமல்ல, அவர் ஏதேனும் நாடுகளின் உளவுத்துறையின் ஒரு கருவியாகச் செயற்பட்டு, உலகப் பிரமுகர்களைத் தனது வலைக்குள் சிக்க வைத்து மிரட்டி வந்தாரா என்ற ரீதியிலும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தக் கோப்புகளில் அடிபடுவதுடன், பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மெண்டல்சன் அரசாங்க இரகசியங்களை எப்ஸ்டீனுக்குக் கசியவிட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஆவணங்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பெயர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ரஷ்யத் தொழில்நுட்ப முதலீட்டாளர்களுடன் எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தநிலையில், அதிகார பலம் மிக்கவர்களைக் கொண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீன் நடத்திய இந்தத் திரைமறைவு ஆட்டங்கள், சர்வதேச அரசியலில் ஒரு பாரிய அதிகார மாற்றத்தையும், பல நாட்டுத் தலைவர்களின் வீழ்ச்சியையும் உருவாக்கும் ஒரு ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |