துப்பாக்கி சூடு நடத்த நல்லூர் ஆலய சூழல் ஒன்றும் விளையாடும் திடல் அல்ல: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Apr 25, 2024 12:31 PM GMT
Report

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லையென வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை (24) நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்துள்ளார்.

எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு

எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு


சாரதியின் உந்துருளி

இது தொர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றில் இருந்து எனது மகிழுந்தில்(Car) யாழ் கண்டி வீதி வழியாக சென்று கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன்.

மகிழுந்தினை எனது சாரதி ஓட்டியதுடன் அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்ததோடு நான் மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.

துப்பாக்கி சூடு நடத்த நல்லூர் ஆலய சூழல் ஒன்றும் விளையாடும் திடல் அல்ல: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி | Judge Ilanchezhiyan Shot Investigation

எனது மகிழுந்து சாரதியின் உந்துருளியை( Motor Cycle) எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்ததுடன் நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால் உந்துருளியில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது மகிழுந்தினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார்.

அவ்வேளை மகிழுந்தன் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார்.

தொழிநுட்பத்தின் அதிஉச்ச கட்டம்: பாடல் பாடும் மோனலிசா ஓவியம்- வைரலாகும் காணொளி

தொழிநுட்பத்தின் அதிஉச்ச கட்டம்: பாடல் பாடும் மோனலிசா ஓவியம்- வைரலாகும் காணொளி


மற்றைய மெய்ப்பாதுகாவலர் 

அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டதையடுத்து மெய்ப்பாதுகாவலர் சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்.

நான்மகிழுந்தினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன் அத்தோடு எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 - 15 அடி இடைவெளி இருந்தது.

துப்பாக்கி சூடு நடத்த நல்லூர் ஆலய சூழல் ஒன்றும் விளையாடும் திடல் அல்ல: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி | Judge Ilanchezhiyan Shot Investigation

துப்பாக்கியை பறித்தவர் துப்பாக்கியை லோர்ட் செய்ததுடன் சிறிது நேரத்தில் "மகே அம்மே " என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார்.

அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார் உடனே என்னுடன் மகிழுந்தில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர் என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார்.

அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்ட நிலையில் பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவரது துப்பாக்கி ரவைக் தீர்ந்ததுடன் சிவில் உடை தரித்தவர் எனது மகிழுந்தின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார்.

வெளிநாட்டு வேலை தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

வெளிநாட்டு வேலை தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு


மெய்ப்பாதுகாவலர் தலையீடு

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால் எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினாரென நன்கு தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

குறுக்கு விசாரணையின் போது எதிரியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி , "முச்சக்கர வண்டி சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால் ஏற்பட்ட முரணாலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றது அத்தோடு உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்த நல்லூர் ஆலய சூழல் ஒன்றும் விளையாடும் திடல் அல்ல: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி | Judge Ilanchezhiyan Shot Investigation

குறித்த வாதத்தை நீதிபதி மறுதலித்து, நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல என தெரிவித்ததையடுத்து நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதோடு நீதிபதி பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

அதேவேளை , சம்பவ தினத்தன்று நீதிபதியின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராக கடமைக்கு சென்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான காவல்துறை உத்தியோகஸ்தர் தனது சாட்சியத்தின் போது துப்பாக்கி சூட்டில் எனது நண்பர் படுகாயமடைந்த நிலையில் நான் எனது நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தமையினால் அந்த சூழலை என்னால் முழுமையாக அவதானிக்க முடியவில்லையென கண்ணீருடன் தனது சாட்சியத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம்(26) வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் முதல் வான் பாலம்: திறந்து வைத்தார் ரணில்

தெற்காசியாவின் முதல் வான் பாலம்: திறந்து வைத்தார் ரணில்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023