செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : சபையில் பொங்கியெழுந்த சிறீதரன்!!
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் குறித்து நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய (17) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த 2010ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தம் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களும் படுகொலை செய்யப்பட்டவர்களும் மனித எலும்புக்கூடுகளாகவும் எச்சங்களாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.
மண்டைதீவு செம்பாட்டு தோட்டம், புனித தோமையார் ஆலயத்திற்கு அருகாமையில், திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு - குமுளமுனை கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளின் வரிசையில் தற்போது யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளும் அமைந்துள்ளன.
சித்துப்பாத்தி மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எந்தவித ஆடைகளும் இன்றி அடித்து நொருக்கப்பட்ட நிலையில் சிறுவர்கள், கைக்குழந்தைகள், பெண்கள் என்ற அடிப்படையில் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாக அறிக்கைககள் குறிப்பிடுகின்றன.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
