நாடாளுமன்ற கோப் குழுவில் இணைக்கப்பட்ட ஜே.வி.பியின் தலைவர்
நாடாளுமன்ற ‘கோப்’குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்றைய தினம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கான (கோப்குழு) உறுப்பினர்கள் இன்று பெயரிடப்பட்டனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி தகவலை வெளியிட்டார்.
கோப் குழு உறுப்பினர்கள் விவரம் வருமாறு,
மகிந்த அமரவீர
மகிந்தானந்த அளுத்கமகே
ரோகித அபேகுணவர்தன
சரத் வீரசேகர
ஜயந்த சமரவீர
இரா. சாணக்கியன்
இந்திக்க அநுருத்த
நாலக கொடஹேவா
ரவூப் ஹக்கீம்
சுசில் பிரேமஜயந்த
அநுர குமார திசாநாயக்க
பாட்டளி சம்பிக்க ரவணக்க
ஜகத் புஷ்பகுமார
ஹர்ஷ டி சில்வா
எரான் விக்கிரமரத்ன
நளின் பண்டார
எஸ்.எம்.மரிக்கார்
பிரேம்நாத் தொலவத்த
மதுர விதாககே
சாகர காரியவசம்
சரித ஹேரத்
கோப் குழுவின் முதலாவது கூட்டத்தின் போது புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.