இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு
இந்தியா குறித்த தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனது முதலாவது இந்திய விஜயத்தின் பின்னர் அந்நாட்டு ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்தோடு, இந்தியாவுக்கு எதிரான ஜே.வி.பி.யின் மோதல் நிலைப்பாடு கடந்த காலத்தில் இருந்த ஒரு விடயம் என்றும் ரில்வின் குறிப்பிட்டுள்ளார்.
நண்பராக இந்தியா
தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியை வழிநடத்தும் ஜே.வி.பி, தற்போது இந்தியாவை ஒரு நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் கருதுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தான் புது தில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் "மிகவும் நட்புரீதியான கலந்துரையாடல்" ஒன்றை நடத்தியதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையை மீட்டெடுப்பதில் இந்தியாவின் பங்களிப்பிற்கும் அவர் நன்றிகளை கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |