இந்திய கோடீஸ்வர வர்த்தகர் அதானிக்கு எதிராக வீதியில் இறங்குகிறது ஜேவிபி
தலைமன்னாரில் உள்ள நிலத்தை 1 பில்லியன் டொலர் முதலீட்டில் காற்றாலை மின் திட்டம் அமைக்க இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தோற்கடிக்க மக்கள், மதகுருமார்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை அணிதிரட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) முடிவு செய்துள்ளது.
தேசிய சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கொமிஷன் கோரி களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களால் நாட்டைக் குறைத்ததன் காரணமாக அரசாங்கத்தால் கடன்களைப் பெற முடியவில்லை என்பதை நாங்கள் அறிவோம். சீனா மற்றும் இந்தியாவிடம் மட்டுமே கடன் வாங்க முடியும். நாட்டின் அன்னிய கையிருப்பை நிரப்ப மற்றொரு வழி வெளி முதலீட்டை கொண்டு வருவது.
ஆனால் இந்த முதலீட்டாளர்கள் இலங்கையின் மீது கொண்டுள்ள காதலுக்காக இலங்கைக்கு வருவதில்லை. “இந்த நாட்டில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தங்களுடைய இருப்பை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளனர்.
அதானி குழுமத்துக்கு தலைமன்னாரில் நிலம் வழங்குவது சமீபத்திய நடவடிக்கை. இந்த ஒப்பந்தங்களில் சில அரசியல்வாதிகள் கொமிஷன் பெறுகின்றனர். இதை நாம் நிறுத்த வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.