தாயும் மகனும் அடித்துக் கொலை! வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட மூவர்
கல்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹன்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) காலை கல்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 வயதான தாயும், 10 வயதான மகனும் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலை செய்த சந்தேக நபரது சடலம் உட்பட 3 சடலங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகள முன்னெடுத்து வருகின்றனர்.
வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த பெண் மற்றும் சிறுவன் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்காலம் எனவும், அதன் பின்னர் சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.