தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்

Ranil Wickremesinghe SL Protest Kalmunai Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 16, 2024 08:00 AM GMT
Report

கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிருப்பு பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி

174 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 

இது குறித்து அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழுகின்ற பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் போராட்டமானது இன்றோடு 174 வது நாளாகவும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் | Kalmunai North Ds Protest Temporarily Suspended

ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம்.

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக திட்டம் தீட்டும் தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் : அம்பலமாகியுள்ள பல விடயங்கள்

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக திட்டம் தீட்டும் தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் : அம்பலமாகியுள்ள பல விடயங்கள்

தீர்வைப் பெற்றுத்தராத ஜனாதிபதி 

எனினும் இந்த அரசு எமது மக்களுடைய போராட்டத்தை மதிக்கவோ அல்லது எமது மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கான தீர்வை வழங்குவதற்கோ முன் வந்திருக்கவில்லை.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் | Kalmunai North Ds Protest Temporarily Suspended

இந்தப் போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ எதிரானது கிடையாது என்பதையும் இது ஒரு அரச நிர்வாக ரீதியான கட்டமைப்பை சீர் செய்வதற்கான போராட்டம் மாத்திரமே என்பதையும் வெளிப்படுத்துகின்றோம்.

இந்த நாட்டில்  ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி எனும் அடிப்படையில் தீர்வை வழங்கக்கூடிய உயர் அதிகாரத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எமது வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததுடன் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம்.“ என  குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் ஏகமனதான தீர்மானமே சஜித்திற்கான ஆதரவு - மாற்றமில்லை என்கிறார் சாணக்கியன்

தமிழரசுக்கட்சியின் ஏகமனதான தீர்மானமே சஜித்திற்கான ஆதரவு - மாற்றமில்லை என்கிறார் சாணக்கியன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்