கல்முனையில் நிகழ்ந்த நூதன திருட்டு : நகைகளை அபகரித்த இந்தியர்கள்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Kalmunai Gold
By Kathirpriya Dec 22, 2023 03:05 PM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

தனியார் உணவகமொன்றில் காசாளராக இருக்கும் உணவக உரிமையாளரின் மனைவியிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி மிகவும் நூதனமான முறையில் சுமார் 8 பவுணுக்கும் அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் (20) இந்த திருட்டு இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திருட்டு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அதிபரிடம் நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

அதிபரிடம் நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர்


பூஜை தொடர்பாக

"சம்பவ தினத்தன்று இரண்டு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர்.

இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ தினத்தன்று (20) இரவு அந்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கல்முனையில் நிகழ்ந்த நூதன திருட்டு : நகைகளை அபகரித்த இந்தியர்கள் | Kalmunai Robbery Ndians Stole Jewels

இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்கலாக ஏனைய நகைகளை இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி ஒரு மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.

இவ்வாறு பூஜை இடம்பெற்றுக்கொண்டு இருந்தபோது இடை நடுவில்பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அந்தப்பெண்ணிடம் வேண்டியுள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட வைத்திய இயந்திரங்கள்

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட வைத்திய இயந்திரங்கள்

மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன்

உடனடியாக அந்தத்தேசிக்காயைப் பெற்ற அந்தப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை தம்வசம் எடுத்து கொண்டு அந்தப் பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.

கல்முனையில் நிகழ்ந்த நூதன திருட்டு : நகைகளை அபகரித்த இந்தியர்கள் | Kalmunai Robbery Ndians Stole Jewels

பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார், இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது, உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை காவல் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு செய்துள்ளமை" குறிப்பிடத்தக்கது.  

நல்லிணக்கத்தைக் காட்டி ஏமாற்ற முடியாது..! ரணிலை மிரட்டிய சம்பந்தன்

நல்லிணக்கத்தைக் காட்டி ஏமாற்ற முடியாது..! ரணிலை மிரட்டிய சம்பந்தன்


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025