இலங்கைக்கு உதவ தயாராகும் உலகநாயகன்..!
தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்ம பூஷன்’ கமல்ஹாசன் சென்னையில் உள்ள இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனை சந்தித்துள்ளார்.
வெங்கடேஷ்வரன் விடுத்த அழைப்பின் பேரில், கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்தார்.
குறித்த விஜயத்தின் போது தனது நலன்புரி சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ கமல்ஹாசன் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெங்கடேஷ்வரன் விடுத்த கோரிக்கை
இதேவேளை, குறித்த சந்திப்பில் அவர்கள் சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முகமாக திரையுலகக் குழு மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வருகை தருமாறு வெங்கடேஷ்வரன் கமல்ஹாசனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.