எரிபொருள் QR-ஐ உருவாக்கியவர்களை நினைவு கூரும் முன்னாள் அமைச்சர்
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்தவர்கள் குறித்து முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நினைவூட்டியுள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் வளர்ச்சிக்கு யாராவது ஏதேனும் பாராட்டு தெரிவிக்க விரும்பினால், அவர்கள் அந்த பாராட்டுகளை இவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தனது X கணக்கில் ஒரு பதிவில் குறிப்பிட்டார்.
QR-ஐ உருவாக்கியவர்கள்
அதன்படி, ஐ.சி.டி.ஏ-வில் ஜெயந்த டி சில்வா மற்றும் அவரது குழுவினர், டயலொக் ஆக்சியாட்டாவில் சுபுன் வீரசிங்க மற்றும் அவரது குழுவினர், மில்லினியம் ஐ.டி-யில் ஷெவன் குணதிலக மற்றும் அவரது குழுவினர் ஆகியோருக்கு அந்தப் பாராட்டு வழங்கப்பட வேண்டும்.

இந்தக் குழு 02 வார காலத்திற்குள் இந்த தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை உருவாக்கியதாகக் கூறும் முன்னாள் அமைச்சர், அரசாங்கம் அதற்கான எந்தச் செலவையும் செய்யவில்லை என தெரிவித்தார்.
அர்ப்பணிப்புடன் அடையப்பட்டது
ஒரு மாதத்திற்குள் அதைச் செயல்படுத்த முடிந்தது என்று கூறிய முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இது பல பங்குதாரர்களின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புடன் அடையப்பட்டது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |