ஈழத்தமிழ் திரைப்படங்கள் பணத்துக்காக படைக்கப்பட்டவை அல்ல : கந்தையா பாஸ்கரன்
ஈழத்தமிழ் திரைப்படங்கள் பணத்துக்காக படைக்கப்பட்டவை அல்ல, அவை எமது இனம், மொழி, நாங்கள் கடந்து வந்த பாதைகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடிய ஏராளமான விடயங்களைக் கொண்டவை என ஐபிசி தமிழ் (IBC Tamil) ஊடகத்தின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் (Kandiah Baskaran) தெரிவித்துள்ளார்.
கருடன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “அன்புள்ள” திரைப்படத்தின் தொடக்க விழாவில் நேற்று (01) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “துரதிஸ்டவசமாக எமது ஈழத்துக்கலைஞர்கள் அண்டைய நாடுகளில் சென்று திரைப்படங்களை எடுக்கும் போது அவற்றை விமர்சையாக கொண்டாடுகின்றோம் ஆனால் நமது நாட்டு கலைஞர்களின் படைப்புகளை அங்கீரிக்க தவறுகின்றோம்.
இந்த நிலைமாற்றம் பெற வேண்டும், எங்களது படைப்புக்களை முதலில் நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
குறிப்பாக, திரைப்படங்கள் மூலம் ஏராளமான விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான அங்கீரிப்பு கிடைக்க வேண்டும் அதன் மூலம் எமது இனம் விடுதலை பெற வேண்டும்” என்றார்.
இது தொடர்பில் அவர் பேசிய விரிவான விடயங்கள் கீழுள்ள காணொளியில்......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |