மோடியுடனான சந்திப்பில் இலங்கை குறித்த கவனத்தை வெளிப்படுத்திய விஜய்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்க்கு முதலமைச்சருக்கு சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை மற்றும் இலங்கையில் கைது செய்யப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து குறிப்பாணை ஒன்றை மோடியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பும் பொதுவெளியில் சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கோரிக்கை மனு
இந்திய தலைநகரில் உள்ள சேவா அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டம், சுமார் 25 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today.@CMOTamilnadu pic.twitter.com/xwE8THhDEV
— PMO India (@PMOIndia) May 27, 2026
விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது இந்த வருகை இருதரப்பு விரிவாக்க திட்டங்கள் மீது கவனத்தை திருப்பும் என எதிர்பார்ப்பதாக செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தின் போது, தமிழகம் தொடர்பான பல முக்கியப் பிரச்சினைகளை எடுத்துரைத்து, விஜய் பிரதமரிடம் ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

வந்தே மாதரம் சர்ச்சை, மேக்கேதாத்து திட்ட தகராறு, பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் மற்றும் இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்களின் கைது செய்யப்பட்டது ஆகியவை தொடர்பான கவலைகள் அந்த குறிப்பாணையில் இடம்பெற்றிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் சம்பிரதாயமான அணிவகுப்பு
அரசு நிகழ்ச்சிகளின் போது வந்தே மாதரம் பாடுவது தொடர்பான விவாதம், விஜய் எழுப்பிய முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர்
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 27, 2026
திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப்… pic.twitter.com/5rwtN8hwFO
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்திற்கு முன்பு தமிழக மாநில கீதத்தைப் பாட அனுமதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என விஜய் பிரதமரை வலியுறுத்தியதாக அறிக்கைகள் தெரிவித்தன.
இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை முடித்துக்கொண்ட பிறகு, விஜய் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றதாகவும், இந்தப் பயணத்தின்போது முதலமைச்சருக்கு சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |