கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு!
kilinochchi
body
army
dress
By Vanan
கிளிநொச்சி மாவட்டத்தின் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலத்திற்கு உரியவர் போர் காலத்தில் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.