கிளிநொச்சியில் போராட்டத்தில் குறித்த பொதுமக்கள்...!
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புணரமைக்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று (31-08-2026) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார் 35 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பற்ற கடவைகள் காணப்படுகின்றன.
பாதுகாப்பு கடவைகள்
இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு கோரி குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மத்த தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் போக்குவரத்து அமைச்சரிடம் தொடருந்து திணைக்களம் ஆகியவற்றிற்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15