சிறிலங்கா விமானப்படை பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை விமானப்படை, பட்டம் விடும் நடவடிக்கைகள் காரணமாக விமானப் போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஈடுபடும் பட்டம் விடும் பருவத்தில், இந்தச் செயல்பாடு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என விமானப்படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விமான நிலைய ஓடுதளங்களின் அருகில் பட்டம் விடுவது மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என்றும், உலகளாவிய ரீதியில் விமான விபத்துகளுக்குக் காரணமாகவும் இது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆபத்தான பிரதேசங்கள்
இப்படியான செயல்கள் நேரடியாக விமானப் பறப்புகளைத் தடைசெய்வதோடு, பயணிகள் மற்றும் பணியாளர் குழுவினரின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் கட்டுநாயக்கா, இரத்மலானை, ஹிங்குராங்கொட, சீனக்குடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தளையை சூழவுள்ள பிரதேசங்களில் பட்டம் பறக்கவிடுவது குறிப்பாக ஆபத்தானதாகக் கருதப்படுவதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த பட்டம் விடும் பருவத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
