கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

India World Doctors
By Shalini Balachandran Aug 26, 2024 04:21 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் (Sanjay Roy) உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ நிறைவு செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.

இந்தநிலையில், அவரின் உடல் ஒகஸ்ட் ஒன்பதாம் ஆம் திகதி கல்லூரியின் கருத்தரங்கு அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை

பெண் பயிற்சி மருத்துவர்

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்திருந்தனர்.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Kolkata Doctor Case

சம்பவத்துடன் தொடர்புடைய இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட போது மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) உட்பட ஏழு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிஐக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, அவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை சனிக்கிழமை தொடங்கிய நிலையில் அன்றைய தினம் சந்தீப் கோஷ் உள்பட நான்கு பேரிடம் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜேர்மனியை நிலைகுலைய வைத்த கத்திக்குத்து தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள சிரிய இளைஞர்!

ஜேர்மனியை நிலைகுலைய வைத்த கத்திக்குத்து தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள சிரிய இளைஞர்!

நீதிமன்ற விசாரணை

அத்தோடு, கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டது.

அவரிடம் சோதனை நிறைவு செய்யப்பட்ட போதிலும் அதை நீதிமன்ற விசாரணைக்கு ஆதாரமாக பயன்படுத்த முடியாதெனவும் எனினும் தொடா் விசாரணைக்கு அந்தச் சோதனையில் தெரியவரும் தகவல்கள் உதவுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Kolkata Doctor Case

அத்தோடு, பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டு தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக சந்தீப் கோஷ் மற்றும் அந்த மருத்துவமனையின் முன்னாள் மருத்துவக் கண்காணிப்பாளரும் துணை முதல்வருமான சஞ்சய் வஷிஸ்த் (Sanjay Vashisht) உள்பட 15 பேருக்குத் தொடா்புள்ள இடங்களில் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி

தொடரும் போராட்டங்கள் 

சந்தீப் கோஷின் வீட்டுக்கு காலை ஆறு மணியளவில் சிபிஐ அதிகாரிகள் சென்ற நிலையில், வீட்டுக் கதவை திறக்காமல் அவா்களை சந்தீப் கோஷ் ஒன்றரை மணி நேரம் வெளியே காக்கவைத்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு, கடந்த சில நாள்களுக்கு முன்னா் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட மருத்துவமனையை ஏராளமானோா் சூறையாடினா்.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Kolkata Doctor Case

இதையடுத்து, அந்த மருத்துவமனை அருகே ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடவும் மற்றும் கூட்டங்கள் நடத்தவும்ஒகஸ்ட் 24 ஆம் திகதி வரை தடை விதித்து மாநில காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தற்போது அந்தத் தடையை ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை காவல் துறை நீட்டித்துள்ளதுடன் கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய தற்காலிக விசா திட்டம்: அறிமுகம் செய்துள்ள பிரபல நாடு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய தற்காலிக விசா திட்டம்: அறிமுகம் செய்துள்ள பிரபல நாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016