கொரிய மொழிப் பரீட்சைக்கான திகதியில் மாற்றம்
கொரிய (Korean) மொழிப் பரீட்சைக்கான திகதி மாற்றம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்வு அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என்றும் அடுத்த மாதம் 7 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்வு அடுத்த மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாகவே கொரிய மொழிப் பரீட்சைக்கான தேர்வுத் திகதிகள் மாற்றப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
