நாடாளுமன்றத்தில் பல மடங்கு அதிகரித்த தேநீர் கட்டணம்!
Sri Lanka Parliament
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
தேநீர்
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இதுவரை ஊடகவியலாளர்களுக்கு 25 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த தேநீர் 100 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் உணவு, தேநீர் மற்றும் சகல வசதிகளுக்காக சுமார் ஆயிரம் ரூபா அறவிடப்படும் வேளையில் ஊடகவியலாளர்களின் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மதிய உணவின் விலை
இந்நிலையில், ஊடகவியலாளர்களின் மதிய உணவின் விலையும் கடந்த மாதத்திலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி