சுதந்திரக் கட்சியின் அறிவிப்பால் சிக்கலில் அரச தரப்பு!
இந்த வாரம் நடைபெறவுள்ள ஆளும் கட்சியின் தலைவர்களின் கூட்டத்தில் தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் கலந்துக்கொள்ள முடியாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்ததை அடுத்து, கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனுராதபுரத்தில் நடைபெறும் விசேட சமய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளதால், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாது ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அரசாங்கம் தொடர்பாக முன்வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட இருந்ததாக கூறப்படுகிறது.