விரைவில் லெபனானின் நிலை இலங்கைக்கு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
srilanka
fuel
champika ranawakka
lebanon
By Sumithiran
இலங்கையின் எரிபொருள் விநியோகத்திற்கான கேள்வி கோரலை ஏற்கமாட்டோம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் லெபனான் நிலை இலங்கைக்கும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி குறித்து போலி நாடகமாடுகின்ற போதிலும் பல மாதங்களாக பணம் செலுத்தாததால் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இலங்கையின் எரிபொருளுக்கான கேள்விகோரலை ஏற்க மறுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளால் லாப்ஸ்
போன்ற சில வலுவான நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாப்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியின் பின்னர் இலங்கையின் காஸ் சந்தைப்படுத்தும் தொழில்துறை மோசடிக்கும்பல்களின் கரங்களுக்கு சென்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.