சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் சுபசிரிபாய பிரதான காரியாலயத்தில் இயங்கி வந்த சிற்றுண்டி சாலை மீது மருதானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைவாக உணவகத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த உணவகத்தை சுகாதார துறையினர் சீல் செய்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு
குறித்த உணவகம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த சிற்றுண்டிசாலைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதாரத்தின் மையப்பகுதியான சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சிற்றுண்டி சாலையே சுகாதார மற்று இயங்கியமை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |