மலையக பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை குட்டி
நோர்வூட் பகுதியில் சிறுத்தை குட்டியொன்று பொறியில் சிக்கியுள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் காவல் பிரிவுக்குட்பட்ட போட்றி தோட்டத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே இந்த சிறுத்தை குட்டி சிக்கியுள்ளது.
நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தை குட்டியொன்றே இவ்வாறு பொறியில் சிக்கியுள்ளது.
சிறுத்தைக் குட்டி
இது தொடர்பில் நோர்வூட் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொறியில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்டு விடுவித்துள்ளனர்.
அத்தோடு, குறித்த பொறியை வைத்த நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
