மீண்டும் நீதிமன்றை நாடுவோம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சிறிலங்காவின் தற்போதைய அதிபர் அரசியலமைப்பு ரீதியில் நியமிக்கப்பட்டவரே தவிர மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றமும் இப்போது மக்கள் ஆணையை இழந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையை இழந்துள்ள நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கான பிரேரணையை முன்வைத்து இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தல் நான்கு வருடங்களாக நடத்தப்படாதுள்ளதனை சுட்டிக்காட்டிய அவர், இம்மாதத்தில் உள்ளூராட்சி சபைகளை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.