வடக்கு தமிழ் கட்சிகளின் கனவு பலிக்காது : அமைச்சர் விஜித ஹேரத் உறுதி
எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது எனவும் அரசு மீதான விமர்சனங்களால் அவர்கள் எதனையும் சாதிக்கப்போவதில்லை என அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்ளூராட்சி தேர்தலிலும் தமிழ் மக்கள் எமக்கே ஆதரவு
“வடக்கு தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் அந்த மக்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் எமது கட்சிக்கு ஆதரவு வழங்குவதைத் தடுக்கும் வகையில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள் நான் உள்ளிட்ட எமது கட்சியின் உறுப்பினர்களைத் தற்போது விமர்சித்து வருகின்றார்கள்.”
நம்பி வருபவர்களை எவரையும் நாம் கைவிட மாட்டோம்
மக்களின் அரசியல், பொருளாதார ரீதியிலான கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவோம். எம்மை நம்பி வரும் மக்கள் எவரையும் நாம் கைவிட மாட்டோம்.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
