கிளிநொச்சியில் லண்டன் பெண் கொலை - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
murder
police
kilinochchi
court
By Jaso
லண்டனிலிருந்து கிளிநொச்சி திரும்பிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் நேற்று (29) கையளிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 22 வயதுடைய இளைஞன் மற்றும் துணைபுரிந்த அவரது மனைவி ஆகி இரண்டு சந்தேக நபர்களும் நேற்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி