தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

Ministry of Education Colombo Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Oct 10, 2024 04:49 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report
புதிய இணைப்பு

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

 பார்வையாளர்கள் அனைவரினதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளருக்கு எதிரான மனு மீதான விசாரணை : திகதி அறிவிப்பு

அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளருக்கு எதிரான மனு மீதான விசாரணை : திகதி அறிவிப்பு

தாமரை கோபுரம் 

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக அவரது தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் சாட்சியம் வழங்கியுள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

 இந்தநிலையில், அவரது மரண விசாரணை நேற்று முன்தினம் (08) கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த மாணவியின் தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

யாழில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

யாழில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

 உயிரிழந்த மாணவி

இதன்போது உயிரிழந்த மாணவியின் தந்தை வழங்கிய சாட்சியத்தில், தனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் உயிரிழந்த மகளின் மூத்த சகோதரி பெலாரஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

லண்டன் பொதுப் பரீட்சைக்குத் தயாராகி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயிரிழந்த மகள் கடந்த வாரம் இரண்டு நாட்களாக பாடசாலைக்கு செல்ல மறுத்ததாக தந்தை கூறியுள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

சம்பவத்தன்று காலை 7.10 மணியளவில் தனது மகளை பாடசாலையில் இறக்கி விட்டு வெளியேறியதாகவும், மாணவியின் கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி சோதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அன்றைய தினம் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிய அவர், அந்த வகுப்பில் பங்கேற்காமல் தோழிகளிடம் பொய் கூறிவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு - வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சாடல்!

ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு - வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சாடல்!

பாடசாலை சீருடை

மாணவியின் பையில் 1,500 ரூபா, பாடசாலை சீருடை உள்ளிட்ட பல பொருட்களைக் கண்டெடுத்த காவல்துறையினர், தலையிலும் உடலின் பல பாகங்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

எனினும் அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

இதனையடுத்து பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்ட மாணவியின் சடலத்தின் மீதான இறுதிக்கிரியைகள் நேற்று (09) காலை பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சு ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் இன்றுடன் நிறைவு

முதலாம் இணைப்பு

கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

கடந்த ஏழாம் திகதி கொழும்பு சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து (Lotus Tower) தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.

அத்தோடு, உயிரிழந்த குறித்த மாணவியும் கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து அண்மையில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

கல்வி அமைச்சு

உயிரிழந்த மூவரும் ஒரே பாடசாலையில் கல்விகற்றவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் இது தொடர்பாக கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர (J.M Thilaka Jayasundara) தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

இது தொடர்பான விசாரணையை மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.

தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து மாணவி பலி

தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து மாணவி பலி

உயிரிழந்த மாணவி 

இலங்கையில் செயற்படும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

அத்தோடு, சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கல்வி அமைச்சின் ஊடாக கண்காணிக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு பின்  தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி வங்கி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இணையவழி வங்கி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

சுன்னாகம், Bergen, Norway, Whitby, Canada

08 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், மானிப்பாய்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கிளிநொச்சி

09 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019