முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கான உதவித்தொகை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை வரும் திங்கட்கிழமை முதல் தபால் நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த முதியோர்களை நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உடனடியாகச் சேர்ப்பதற்கும், அஸ்வெசும கணக்குகள் மூலம் பணம் செலுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சத்துரா மிஹிடும் குறிப்பிட்டார்.
அஸ்வெசும கொடுப்பனவு
அத்துடன் முதியோர் உதவித்தொகை இரண்டு வழிகளில் வழங்கப்படுவதாக சத்துரா மிஹிடும் சுட்டிக்காட்டினார்.

நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கு, அவர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் பணம் செலுத்தப்படுவதாகவும் அவர்களுக்கான பணம் கடந்த மாதம் 29 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அஸ்வெசும கணக்குகள் இல்லாத அல்லது கணக்கு முரண்பாடுகள் காரணமாக பணம் நிறுத்திவைக்கப்பட்ட முதியோர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதி தபால் நிலையங்கள் மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |