எல்.பி.எல்லில் கால்பதிக்கும் இரு யாழ்ப்பாண வீரர்கள்!
Tamils
Sri Lanka
By pavan
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறப்போகும் எல்பிஎல் (LPL) கிரிக்கெட் தொடரில் யாழ்.மத்திய கல்லூரியை சேர்ந்த 2 வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன் ஆகிய இருவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு கடந்த 3 வருடங்களாக LPL தொடரில் தொடர்ந்து விளையாடுபவர் ஆவார்.
பந்து வீச்சாளர் விதுசன்
மேலும், சிறந்த பந்து வீச்சாளர் விதுசன் என்பவர் கொழும்பின் பிரபலமான Moors Club அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியவர் ஆவார்.
அதுமட்டுமன்றி அவ்வணிக்காக இவ்வருடம் மிகக் கூடுதலான விக்கட்டுக்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
