யார் அந்த அதிர்ஷ்ட நபர்..! சீட்டிழுப்பில் விழுந்த கோடிக்கணக்கான பணம்: உதவிகளை கோரும் சீட்டு நிறுவனம்
சீட்டிழுப்பில் பரிசு வென்ற இரண்டு வெற்றியாளர்கள் தங்களது பரிசு தொகையை பெற்றுக் கொள்ளவில்லை என லொத்தர் சீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பிரம்டனில் கொள்வனவு செய்யப்பட்ட லோட்டாரியோ லொத்தர் சீட்டு ஒன்றுக்கு பத்தாயிரம் டொலர்கள் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால வரையறை
மேலும், மிஸ்ஸிசாகுவாவில் கொள்வனவு செய்யப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் 16ஆம் திகதி காலாவதியாவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு லொட்டர் சீட்டு நிறுவனமும் வெற்றி பெற்ற நபர்கள் பரிசுத்தொகை பெற்றுக் கொள்வதற்கு கால வரையறைகளை அறிவித்துள்ளன.
அந்த வகையில் இந்த இரண்டு லொத்தர் சீட்டுக்களுக்கான பரிசு தொகையை குறித்த காலத்திற்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
1-800-387-0098 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை பரிசு வென்றவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.