மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட பிரமாண்ட சொகுசுக் கப்பல்!
மெயின் ஷிஃப் 6 என்ற சொகுசு உல்லாசக் கப்பல், இலங்கைக்கு தனது முதலாவது வருகையைப் பதிவு செய்யும் வகையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் (ECT) நங்கூரமிட்டுள்ளது.
மால்டா நாட்டின் கொடியின் கீழ் பயணிக்கும் இந்தக் கப்பல், 2,380 சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் 951 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, இக்கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக, உள்ளூர் பயண முகவர் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகள் துறைமுகத்தில் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள்
கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பாக, இந்த உல்லாசக் கப்பல் கடந்த 19ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்குச் சென்றிருந்தது.

Image Credit: Mein Schiff
அங்கு தங்கியிருந்த காலப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் யால, பண்டல மற்றும் உடவளவ ஆகிய தேசியப் பூங்காக்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் நகரத்தையும் உள்ளடக்கிய முக்கிய வனவிலங்கு மற்றும் கலாச்சார இடங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |