ரணிலுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் - சுமந்திரன் நம்பிக்கை
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை
தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கான தேர்வுகளுக்காக அதிபரிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
தீர்வு
இது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது,
"அது தொடர்பில் ஆராய்ந்து ஜூலை மாதத்தின் பின் உரிய நடவடிக்கை எடுப்பதற்கே அதிபர் இவ்வாறு கால அவகாசம் விதித்துள்ளார்.
அதுவரை நாம் பொறுமையுடன் காத்திருக்கின்றோம்.
எமது பிரச்சினைக்கான தீர்வைத் தேடி நாம் இந்தியா செல்ல வேண்டிய தேவை இல்லை.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என நம்புகிறோம்." என சுமந்திரன் கூறியுள்ளார்.
YOU MAY LIKE THIS
