மடு அன்னையின் ஆடி மாதத் திருவிழா இன்று - லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பு (படங்கள்)
மடு ஆடி மாதத் திருவிழா
மன்னார் மடு அன்னையின் ஆடி மாதத் திருவிழா இன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளின் பின்னர் திருவிழா அதிகளவான பக்தர்களுடன் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மடு திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.
மடு அன்னையின் அருளைப் பெறுவதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.