வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம் இன்று ( படங்கள்)
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம் இன்று(1) சிறப்புற நடைபெற்றுள்ளது.
தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நவதள இராஜகோபுர பணிகள் மற்றும் ஆலய புனரமைப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ஆலயத்துக்கும் நவதள இராஜகோபுத்துக்கும் மகா கும்பாபிசேகம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
மகா கும்பாபிசேக பெருவிழா
கடந்த 26.05.23 அன்று கர்மாரம்பம் ஆரம்பமாகி சிவாச்சாரியார்களால் யாகபூசைகள் நடத்தப்பட்டு 29,30,31 ஆம் திகதியான மூன்று நாட்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, 01.06.23 இன்று ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் சுயம்பு லிங்கத்திற்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவதள இராஜகோபுரத்திற்கும் 11.10 மணி தொடக்கம் 12.00 மணி வரையுள்ள சிம்மலக்கன சுபநேரத்தில் சிவாச்சாரியார்களின் மந்திர ஓதலுடன் மகா கும்பாபிசேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகைதந்து கும்பாபிசேக பெருவிழாவினை கண்டு எம்பெருமானின் ஆசியினையும் பெற்றுச்சென்றுள்ளார்கள்.
