வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
வவுனியாவில் (Vavuniya) மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் (University of Vavuniya) ஏற்பாட்டில் பூங்கா வீதியில் அமைந்துள்ள அதன் அலகுகள் கற்கை கூடத்தில் நேற்று (28.06.2025) மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.
பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறி இணைப்பாளர் ச. மதிவதணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஊடக கற்கை மாணவி பாரதியூர் சங்கீதா தொகுத்து வழங்கியிருந்தார்.
வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தியினை மதிவதணி வழங்கி வைத்து நூல் பற்றிய அறிமுக உரையினை நிகழ்த்தினார்.
ஏன் இந்த மொழிபெயர்ப்பு
மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் அவசியமாகின்றது தொடர்பாக நூலாசிரியர் என் சரவணன் குறிப்பிடும் போது, "தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பான 1978 முதல் 2010 வரையான போராட்ட கால குறிப்புக்களைக் கொண்ட இந்த நூல் உள்ளடக்கத்தினை தமிழ் மக்கள் அறியும் போதுதான் அதற்காக அவர்களால் பொருத்தமான எதிர்வினையாற்ற முடியும் என்பதால் இதன் மொழிபெயர்ப்புக்கு முன்னுரிமை அதிகம் என்று குறிப்பிட்டிருந்தார்.
நினைவுப்பரிசில்
ஊடக கற்கை மாணவர்களுக்கான விரிவுரைகளை நிகழ்த்தியிருந்த நூலாசிரியருக்கு பல்கலைக்கழகம் சார்பில் மதிவதனி நினைவுப்பரிசிலை வழங்கி கௌரவித்திருந்தார்.
இலங்கை அரசியலில் அதிக கவனமெடுத்து ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் சரவனண் இலங்கை அரசியல் களம் பற்றி பல பெறுமதியான நூல்களை எழுதியுள்ளதுடன் பல்கலைக்கழகங்களில் வருகை விரிவுரையாளாராகவும் கடமையாற்றி வருகின்றார்.
ஊடகத்துறை மாணவர்களின் பங்குபற்றலோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




