எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு

Dumindha Silva Mahinda Rajapaksa Hirunika Premachandra President of Sri lanka
By Eunice Ruth Jan 17, 2024 03:22 PM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வாவுக்கு இடையிலான முறுகல் நிலையை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தீவிரமடைய செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவி ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் விளைவாக, தனது தந்தை, அரசாங்கத்தின் ஆதரவுடன் துமிந்த சில்வாவால் கொல்லப்பட்டதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட தீர்மானத்தை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, ஹிருணிகா பிரேமசந்திர இதனை தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா உயர் நீதிமன்றத்தால் இன்று முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டது.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி எனது தந்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் மேலும் மூவர் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டதோடு, அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

மகிந்தவின் நடவடிக்கை

இந்த தீர்ப்பை சவாலுக்குட்படுத்தும் வகையில் குற்றவாளிகளால் மனுத்தாக்கல் செய்யப்பட்டாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுஜன பெரமுன ஆயத்தம் : நாமல் உறுதி

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுஜன பெரமுன ஆயத்தம் : நாமல் உறுதி

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வாவுக்கு இடையிலான முறுகல் நிலையை பேசி தீர்க்க முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முயற்சிக்கவில்லை.

மாறாக அதனை குண்டுகளின் மூலம் தீர்க்க அவர் முயற்சித்தார்.

துமிந்த சில்வாவின் நம்பிக்கை

இந்த பின்னணியில், தான் கொலை செய்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியுமென்ற நம்பிக்கை துமிந்த சில்வாவுக்கு இருந்தது.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

இதனாலேயே, அவர் எனது தந்தையை கொலை செய்தார். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த கொலை செய்யப்பட்டது உண்மை.

அதிபர் பொதுமன்னிப்பு

இதையடுத்து, துமிந்த சில்வா அரசாங்கத்தின் உதவியுடன் வெளிநாடொன்றுக்கு நாடு கடத்தப்பட்டார்.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த பின்னணியில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவால் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் தனது அரசியல் பணிகளை மிகவும் சுதந்திரமாக முன்னெடுத்தார்.

கொலைக்கான நீதி

எனது தந்தையின் கொலைக்கு நீதி வேண்டுமென கோரி நாம் தொடர்ந்தும் போராடினோம். இன்னும் போராடி வருகிறோம்.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

கோட்டாபய ராஜபக்ச மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக எனது தந்தை குரல் கொடுத்ததன் காரணமாக அவர் கொல்லப்பட்டார்.

வரலாறு தெரியாதவர்கள்

இதனை பலர் அறிந்திருக்கிறார்கள். எனினும், வரலாறு தெரியாத சிலர் தற்போது எனது தந்தையின் கொலை தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

துமிந்த சில்வாவுக்கான மரண தண்டனையை மீள உறுதிப்படுத்தி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எமது வெற்றியல்ல. எம்முடன் போராடிய மக்களின் வெற்றி” என தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

வர்த்தகர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்