எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு

Dumindha Silva Mahinda Rajapaksa Hirunika Premachandra President of Sri lanka
By Eunice Ruth Jan 17, 2024 03:22 PM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வாவுக்கு இடையிலான முறுகல் நிலையை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தீவிரமடைய செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவி ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் விளைவாக, தனது தந்தை, அரசாங்கத்தின் ஆதரவுடன் துமிந்த சில்வாவால் கொல்லப்பட்டதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட தீர்மானத்தை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, ஹிருணிகா பிரேமசந்திர இதனை தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா உயர் நீதிமன்றத்தால் இன்று முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டது.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி எனது தந்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் மேலும் மூவர் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டதோடு, அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

மகிந்தவின் நடவடிக்கை

இந்த தீர்ப்பை சவாலுக்குட்படுத்தும் வகையில் குற்றவாளிகளால் மனுத்தாக்கல் செய்யப்பட்டாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுஜன பெரமுன ஆயத்தம் : நாமல் உறுதி

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுஜன பெரமுன ஆயத்தம் : நாமல் உறுதி

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வாவுக்கு இடையிலான முறுகல் நிலையை பேசி தீர்க்க முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முயற்சிக்கவில்லை.

மாறாக அதனை குண்டுகளின் மூலம் தீர்க்க அவர் முயற்சித்தார்.

துமிந்த சில்வாவின் நம்பிக்கை

இந்த பின்னணியில், தான் கொலை செய்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியுமென்ற நம்பிக்கை துமிந்த சில்வாவுக்கு இருந்தது.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

இதனாலேயே, அவர் எனது தந்தையை கொலை செய்தார். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த கொலை செய்யப்பட்டது உண்மை.

அதிபர் பொதுமன்னிப்பு

இதையடுத்து, துமிந்த சில்வா அரசாங்கத்தின் உதவியுடன் வெளிநாடொன்றுக்கு நாடு கடத்தப்பட்டார்.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த பின்னணியில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவால் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் தனது அரசியல் பணிகளை மிகவும் சுதந்திரமாக முன்னெடுத்தார்.

கொலைக்கான நீதி

எனது தந்தையின் கொலைக்கு நீதி வேண்டுமென கோரி நாம் தொடர்ந்தும் போராடினோம். இன்னும் போராடி வருகிறோம்.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

கோட்டாபய ராஜபக்ச மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக எனது தந்தை குரல் கொடுத்ததன் காரணமாக அவர் கொல்லப்பட்டார்.

வரலாறு தெரியாதவர்கள்

இதனை பலர் அறிந்திருக்கிறார்கள். எனினும், வரலாறு தெரியாத சிலர் தற்போது எனது தந்தையின் கொலை தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு | Mahinda Duminda Silva Killed Father Hirunika Sjb

துமிந்த சில்வாவுக்கான மரண தண்டனையை மீள உறுதிப்படுத்தி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எமது வெற்றியல்ல. எம்முடன் போராடிய மக்களின் வெற்றி” என தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

வர்த்தகர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010